Saraswathi Mahavidyalayam

 

 

யா / அராலி சரஸ்வதி மஹாவித்தியாலயம்

 

யா / அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் சைவ சமயத்தையும், செந்தமிழையும் அராலி கிராமத்தில் வளர்க்கும் நோக்கமாக 1912ம் ஆண்டு சரஸ்வதி வித்தியாசாலை என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலையின் பரிபாலனப் பொறுப்பை சரஸ்வதி மகா சபை ஏற்டறுக் கொண்டது . திரு. தி. செல்லப்பாபிள்ளை அவர்கள் தருமசாதனமாக வழங்கிய இரண்டு பரப்பு காணியில் இப் பாடசாலைக் கட்டடம் அமைக்கப்பட்டது.நாவலர் பெருமானின் திருவுளப் பாங்கின்படி உதயமான வட்டுக்கோடடைச் சைவசித்தாந்த சமாசமும் , அராலியில் தோன்றிய வாணி விலாச சபையும் இவ் வித்தியாசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தன.

 

 

யா / அராலி சரஸ்வதி மஹாவித்தியாலயம்


logo